யார் நீ

நான் பார்க்கும் ஓவியத்தின் வண்ணம் நீ! நான் கேட்கும் இசையின் உயிர் நீ ! மொழி தந்த தமிழின் சுவை நீ! கடலாடும் அலையின் நுரை நீ! கருமேகம் கொட்டும் மழையின் ஈரம் நீ! நீரோடும் ஆற்றின் வழி நீ! பசு தந்த பாலின் வெண்மை நீ! வளைந்து நிற்கும் வானவில்லின் நிறம் நீ! நிலகரியில் கிடைக்கும் வைரக்கல் நீ! வீதியில் பாய் விரிக்கும் மார்கழி கோலம் நீ! பால்வெளியில் இருக்கும் கோடி நட்சத்திரம் நீ! பூமிக்கே உரித்தான ஒரே நிலவும் நீ! சொல் தர துடிக்கும் பொருள் நீ! விடை கண்ட குழப்பத்தின் வினாவும் நீ! விசாரணை முடிந்து வியந்து கேட்கிறேன்.... யார் நீ!!?