நாற்காலி


கால் முளைத்த ஜடம்
ஒன்றல்ல இரண்டல்ல
நாற்கால் முளைத்த ஜடம்.
இருகாலுடை யோரை தாங்கும்,
நாற்கால் முளைத்த ஜடம்.
சான்றோரை மட்டும் தாங்கியது
அரசவையில்-இது
நாற்கால் முளைத்த ஜடம்.
வீட்டுக்கொன்று இருப்பதே பெருமிதம்
அக்காலத்தில்- இது
நாற்கால் முளைத்த ஜடம்.
மேஜைகளை மணந்த மேதாவி-இது
நாற்கால் முளைத்த ஜடம்.
சவரகாரனின் முதலீடு,
அலுவலகங்களின் குறியீடு,
இது நாற்கால் முளைத்த ஜடம்.
இதன் பரிணாம வளர்ச்சி முடிவுறாது,
ஆம் என்றும் இது
நாற்கால் முளைத்த "ஜடம்".


15th Nov 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்