தோழிக்கு பிறந்தநாள் .!!


தோழி..!
என் கிருக்கல்களை கவிதை என்பாள்..
என் புகைப்படத்தை அருமை என்பாள்..
சொல்வதை எதையும் செய்ய மறுப்பாள்..
வேண்டிய உதவியை தயங்காமல் கேப்பாள்..
யோகம் அனைத்தையும் ஆசனம் என்பாள்..
அதை பழகியபொழுது வயதை மறப்பாள்..
ஆசிரியர் தொழிலை அறவே வெறுப்பாள்..
வழியின்றி அதை ரசித்தும் செய்வாள்..
திருமண கயிற்றை நாயகன் முடிக்க,
அவனையும் எனக்கு தோழனாக்க,
பறக்கும் தட்டு நாடு கடத்த,
சோகத்துடன் நானுமிருக்க,
குறுஞ்செய்தி கையில் சத்தமாய் ஒலிக்க,
"சந்தோஷ்" அத்துடன் நீயும் இருக்க,
ஆனந்தம் கொண்டேன் உன்னால் தோழி..!!
மேலும் மேலும் ஆனந்தம் பெருக,
உன்னிடமிருந்து அது ஊற்றுமெடுக்க,
புன்னகை பற்கள் என்றும் மிளிர,
இந்நாள் போல் என்றும் மகிழ,
இறையருளை யாமும் யாசிக்க..
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!! தோழியே...!!!!!
தோழமையுடன்,
நிதின்.K.சதாசிவம்

27th Jun 2017

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்