பொங்கலோ பொங்கல்


சுட்டெரிக்கும் சூரியனும் முழிச்சு பார்க்கும் முன்னவே, பொங்கி வரும் பொங்க பான பொங்கலிது பாருங்க.

காலமெல்லாம் உழுத பய உழச்சு களச்ச நாளிது, எச்சி ஊற கரும்பு திங்கும் பொங்கலிது பாருங்க.

வட கிழக்கு ஈசானி மூல காப்பு கட்டி நிக்குது, வெளஞ்சி வரும் வெள்ளாம பொங்கலிது பாருங்க.

தை பொறந்த வழி பிறக்கும்னு சொல்லி வச்சது யாருங்க, சொன்ன சேதி நெசமாச்சு பொங்கலிது பாருங்க.

வருசமெல்லாம் கம்ப்யூட்டர தட்டி கிடக்கும் பயலுக, பொங்கலையும் கொண்டாடும் அதிசியத்த பாருங்க.

14th Jan 2016

Comments

Popular posts from this blog

பாரதியாரின் ஆத்திச்சூடி _ ; புதுக்கதை விளக்கம்

நினைவுகளுக்கு இடமில்லை!!

ஒரு வில்லன் இருந்தான்