Posts

Showing posts from June, 2019

அவளதிகாரம்

Image
ஒரு பெண் தன் ஏழு பருவத்திலும் தன் தோழியுடனான நட்பை போற்றுவதாய்.. தலைப்பு: அவளதிகாரம் பேதை பருவத்தே என்னுடன் அமர்ந்து நான் கேட்ட கதையை அவளிடமும் அவள் கேட்ட கதையை என்னிடமும் ஒருசேர சுவைக்க என்னுடன் இருந்தாள்- அவள். பெதும்பை என கூவி திரிய தும்பைப்பூ வாடை அறிய மதில்மேல் நின்றதை பறிய கீழ்விழுந்தென் கை தறிய தந்து யரென கண்கசிந்தாள்- அவள். மங்கையென திரிந்து பதின்மம் வர புரிந்து பெண்மை அதை கடிந்து- இது வெட்கமென அறிந்து களவாடி நகைத்தாள்- அவள். மடந்தையாம், பெண்மையாம்-இனி என் தவறனைத்திற்கும் தோழியவள் உடந்தையாம், இத்யாதி இத்யாதி என் குணவியாதியின் மூலமவள் சேர்க்கையாம்- என ஊர் சொல்ல, உற்றார் சொல்ல என்னுடன் இருந்தாள்- அவள். அரிவை யிடத்தே அறிவை தீட்டி பாரதியின் புதுமை பெண் நாமென உளறி விண்ணையடைந்த கல்பனா யாம், பதக்கம் வென்ற சிந்துவடி நீயென என- கன வருகே காத்திருந்தாள்- அவள். தெரிவையென அணிசேர கனாமூட்டை மதிலேற என் கணவனவன் கை சேர - திருமணநாளில் மேடையுலாவி மணப்பெண் தோழியென என்னருகே வீற்றிருந்தாள்- அவள். பேரிளம் பெண்ணான பின் வயதொத்த தோழிகள் பலரிருந்தும் பருவத்தே என்னுடனிருந்த த...